×

வெடி விபத்தில் இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதி: என்.ஆர்.தனபாலன் கோரிக்கை

சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள கல்குவாரி தமிழக அரசிடம் அனுமதி பெற்று நடந்து வருகிறது. வெடிமருந்துகளை குடோனில் வைக்கும்போது எதிர்பாராதவிதமாக நடந்த வெடிவிபத்தில் உடல் சிதறி உயிரியிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும், காயமடைந்து மருத்துவ மனைகளில் உயிருக்கு போராடும் தொழிலாளர்களுக்கு தலா 5 லட்ச ரூபாயும், சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களுக்கு தலா 1 லட்சமும் நிவாரண உதவியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.

மேலும் கல்குவாரி, பட்டாசு ஆலைகளில் வேலை செய்யும் கூலித் தொழி லாளர்களுக்கும் அரசு இலவச காப்பீடு திட்டத்தை அமல்படுத்தவேண்டும். ஒவ்வொரு தொழி லாளர்களுக்கும் குறைந்த பட்சம் 10 லட்ச ரூபாய் இலவச காப்பீடு திட்ட முறையை கொண்டு வர வேண்டும். கல்குவாரி, பட்டாசு ஆலைகளில் வறுமையை போக்குவதற்காக பணிபுரியும் ஏழைகளின் உயிர்களும் குடும்பங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post வெடி விபத்தில் இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதி: என்.ஆர்.தனபாலன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : NR Dhanapalan ,CHENNAI ,Perundhalaivar Makkal Party ,Kalquari ,Kariyapatti ,Virudhunagar district ,Tamil Nadu government ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...